ஜோதிட உலகத்தில் இருக்கும் "பாதகாதிபதி" பற்றிய சில முக்கியமான தகவல்கள். (தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்)
★பாரம்பரிய ஜோதிடத்திலும் வேதஜோதிடதிலும் "பாதகாதிபதி" பற்றிய சில முரண்பட்ட தகவல்கள் இருக்கின்றன.
★உண்மையில் பாதகாதிபதி யார் நமது ஜாதகத்தில் பாதகாதிபதி மூலம் என்ன விதமான பிரச்சினைகள் நமக்கு வரும் என்பதை பார்க்கலாம்.
★சர லக்னம், சிர லக்னம் உபய லக்னம்,இந்த மூன்று லக்னத்தில் பிறந்தவர்களுக்கு பாதகாதிபதி வேறுபடுகிறது.அவற்றை கடைசியில் படத்தில் காண்பித்திருக்கிறேன்.
பார்த்துக்கொள்ளவும்.
1.சரலக்னங்கள், 2.பாதகஸ்தானம் 3.பாதகாதிபதி
★மேஷம் கும்பம் சனி
★கடகம் ரிஷபம் சுக்கிரன்
★துலாம் சிம்மம் சூரியன்
★மகரம் விருச்சிகம் செவ்வாய்
1.சிர லக்னங்கள் 2.பாதகஸ்தானம்
3.பாதகாதிபதி
★ரிஷபம் மகரம் சனி
★சிம்மம் மேஷம் செவ்வாய்
★விருச்சிகம் கடகம் சந்திரன்
★கும்பம் ரிஷபம் சுக்கிரன்
1.உபய லக்னங்கள் 2.பாதகஸ்தானம்
3.பாதகாதிபதி
★மிதுனம் தனுசு. குரு
★கன்னி மீனம். குரு
★தனுசு மிதுனம் புதன்
★மீனம் கன்னி புதன்
★பாதகாதிபதி நமது ஜாதகத்தில் எப்படி வேலை செய்யும் என்றால்
நம்முடைய வாழ்க்கையில் முன்னேறுவதற்கு அல்லது அடுத்த நிலைக்குப் போவதற்கு என்ன என்ன விஷயங்கள் நமக்கு தேவையோ அதனை நம்மிடம் பாதகாதிபதி பிடிக்காத மாதிரி சொல்வார்கள்.
★எந்தெந்த விஷயம் நாம் செய்ய வேண்டுமோ அல்லது எந்தெந்த விஷயங்கள் நமக்கு பிடிக்குமோ அதனை பாதகாதிபதி நம்மிடம் பிடிக்காத மாதிரி சொல்வார்கள்.
★எந்தெந்த விஷயங்கள் நாம் செய்யக் கூடாதோ,எந்த செயலை நாம் செய்யக் கூடாதோ அல்லது எதனைச் சார்ந்து நாம் இருக்கக் கூடாதோ அதனை நம்மிடம் பாதகாதிபதி பிடித்த மாதிரி சொல்வார்கள்.
★பாதகாதிபதி நம்மிடம் பிடித்த மாதிரி ஏதாவது ஒரு விஷயம் செய்யச் சொன்னால் நாம் அதை செய்யக்கூடாது.மீறி செய்தால் நமக்கு பிரச்சினை ஏற்பட்டுவிடும்.
★பாதகாதிபதி நம்மிடம் பிடிக்காத மாதிரி ஒரு விஷயம் செய்ய சொன்னால் நாம் அதை தான் செய்ய வேண்டும்.பாதகாதிபதி நமக்கு பிடிக்காத மாதிரி சொன்ன விஷயத்தை நாம் செய்தால் நம் வாழ்க்கையில் அடுத்த நிலைக்கு போகக் கூடிய வாய்ப்புகள் நமக்கு வரும்.
★அதாவது பிடிக்காத மாதிரி சொன்ன விஷயத்தை செய்ய வேண்டும் பிடித்த மாதிரி சொன்ன விஷயத்தை செய்யக்கூடாது அவ்வளவுதான்.
★உதாரணமாக சிர லக்னங்களில் பிறந்தவர்களுக்கு பாதகாதிபதி 9ம் பாவம் ஆகும்.9ம் பாவம் என்பது தந்தை ஸ்தானம் ஆகும்.
★ ஸ்திர லக்னங்களில் பிறந்தவர்களுக்கு தந்தை ஒரு விஷயம் நமக்கு பிடித்த மாதிரி சொன்னால் அதனை நாம் செய்யக்கூடாது.மீறி செய்தால் நாம் பிரச்சினையில் மாட்டிக் கொள்வோம்.
★தந்தை நமக்கு ஒரு விஷயத்தை பிடிக்காத மாதிரி சொன்னால் அதைத்தான் நாம் செய்ய வேண்டும்.
அதுதான் நம் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வழி ஆகும்.
★பிடித்த மாதிரி ஒரு விஷயம் சொன்னால் அது அவுட்.பிடிக்காத மாதிரி ஒரு விஷயம் சொன்னால் அதுதான் நமக்கு passive.
★சர லக்னங்களில் பிறந்தவர்களுக்கு பதினோராம் பாவம் பாதகாதிபதி ஆகும்.11 ஆம் பாவம் என்பது மூத்த சகோதரர், சித்தப்பா
★சர லக்னங்களில் பிறந்தவர்கள் என்றைக்குமே மூத்த சகோதரர் மற்றும் சித்தப்பா ஒரு விஷயத்தை பிடித்த மாதிரி நம்மிடம் சொன்னால் அதனை செய்யக்கூடாது.
★பிடிக்காத மாதிரி ஒரு விஷயம் சொன்னால் அதைத்தான் நாம் செய்ய வேண்டும்.
★உபய லக்னங்களில் பிறந்தவர்களுக்கு 7ம் பாவம் பாதகாதிபதி ஆகும்.
★உபய லக்னங்களில் பிறந்தவர்கள் என்றைக்குமே மனைவி அல்லது காதலன் அல்லது காதலி ஒரு விஷயம் பிடித்த மாதிரி நம்மிடம் சொன்னால் அதை செய்யக்கூடாது.
★பிடிக்காத மாதிரி சொன்னால் அதனை தான் செய்ய வேண்டும்.
★இந்த சூட்சமம் பாதக ஸ்தானத்தில் இருக்கும் கிரகத்திற்கும் பொருந்தும்.
உதாரணமாக பாதக ஸ்தானத்தில் செவ்வாய் இருந்தால் இளைய சகோதரர் நெருங்கிய நண்பர்கள்,
நமக்கு பிடித்த மாதிரி ஒரு விஷயம் செய்ய சொன்னால் நாம் அதை செய்யக்கூடாது.
★பாதக ஸ்தானத்தில் சந்திரன் இருந்தால் தாய்,குரு இருந்தால் குழந்தைகள்,சுக்கிரன் இருந்தால் மனைவி அல்லது காதலன் அல்லது காதலி,சனி இருந்தால் மூத்த சகோதரர்,சித்தப்பா,சூரியன் இருந்தால் தந்தை,புதன் இருந்தால் தாய் மாமா,இவற்றில் எந்த கிரகம் பாதக ஸ்தானத்தில் இருக்கிறதோ அந்த கிரகத்தின் உறவுகள்.பிடித்த மாதிரி ஒரு விஷயம் நம்மை செய்ய சொன்னால் நாம் அதை செய்யக்கூடாது.
★பிடிக்காத மாதிரி ஒரு விஷயம் நம்மை சொன்னால் அதுதான் நம்முடைய வாழ்க்கையை அடுத்த நிலைக்கு நம்மை உயர்த்தக்கூடிய வழியாகும்.
Comments
Post a Comment