Skip to main content

பூக்கள் காட்டும் சகுனம்..?



சகுனத்தை அறிவதிலும் புஷ்பம் பயன்படுகிறது. சுவாமிக்கு அணிவிப்பதற்காக எதிரில் ஒருவர் மாலை கொண்டு வந்தால் - அது காரிய சித்தி - சுப சகுனம்.
மனிதர்களுக்கு போடுவதற்காக பூ மாலை ஏந்தி ஒருவர் எதிர் வந்தால், பணத்தினால்தான் காரியசித்தி என்பதனை அறியலாம்.
மகான்களுக்கு அணிவிக்க எதிரில் மாலையுடன் வந்தால், கடன் தொல்லை தீரும், பிறவி கடன், திருமணக் கடன் கூடத் தீர்ந்து விடும்.
பிரேதத்திற்கு அணிவிக்க மாலையுடன் எதிர் வந்தால் கெட்ட சகுனம், காரிய தடங்கல். அன்று வெளியில் செல்லலாகாது.
பூக்களிடம் இருந்து அறிய வேண்டியன: மல்லிகை தான் இருக்கும் இடத்தை சுகந்த நறுமணத்துடன் வைத்து கொள்ளும். பூலோகத்தில் மல்லிகைப் பூ இருந்தாலும், அதற்கான நறுமணம் யாவும் விண்ணுலகப் புஷ்ப லோகத்தில் இருந்துதான் வந்து கொண்டிருக்கும்.
மல்லிகையைப் போலவே மனிதர்களும் தாங்கள் இருக்கும் இடத்தை எப்போதும் பூக்கள், ஊதுபத்தி, சாம்பிராணி, கற்பூரம் போன்றவற்றுடன் நல்வாசனையுடன் வைத்துக் கொள்ள வேண்டும். துர்மணம் இருக்க கூடாது. இதன் காரணமாய்த்தான் மானுடர்கள் தலையிலோ, காதிலோ, பையிலோ, கையிலோ எப்போதும் மலர்களை வைத்திருக்கும் புனித பண்பாடு ஏற்பட்டது.
யார் வந்தாலும் எவ்வித பேதமும் இன்றி மலர்கள் நறுமணம் கொடுக்கும். இதுவே மலர்களின் தான, தர்மம். மலர்கள் தங்கள் மணத்தின் மூலம் புகட்டும் பாடத்தில் இதுவும் ஒன்று. இவ்வாறு நிறைய பாடங்களை மனித குலம் புஷ்பங்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். இதற்காகவே மனிதன் பூக்களிடம் நிறைய பேசி வர வேண்டும் என்பது, பிறர் இதனைப் பார்த்து கேலி செய்வார்களோ என்று ஆரம்பத்தில் எண்ணக் கூடும். முதலில் மானசீகமாக பேசி வாருங்கள். பூக்கள் நிச்சயமாய் பதில் தருவதைச் சிறிது சிறிதாய்ப் புரிந்து கொள்ளலாம்.
மலர்கள் நறுமணத்தைத் தருவது போல, யார் எந்த நேரத்தில் தானமாய் வந்து கேட்டாலும் உங்களால் முடிந்ததைக் கொடுங்கள். இதன் உண்மைப் பொருளானது, ஏழைகளுக்கு ஏதேனும் கொடுப்பதற்கு உணவு, பழங்கள், பிஸ்கட், மிட்டாய் என்று எதையேனும். குறிப்பாய் பயணத்தின் போது எப்போதும் கைவசம் வைத்துக் கொள்ளுங்கள் என்பதே. எவருக்கும் காசாய்க் கொடுக்காதீர்கள். காசைக் கொடுத்து அதில் பீடி, சிகரெட் என்று தீயதை வாங்கினால் இந்த பாவத்தின் பங்கு அப்படி காசு கொடுத்தவரையும் தொத்தும். இயன்ற வரையில் பொருளாய்க் கொடுங்கள்.
முக்கியமாக உங்கள் அன்பினையும் சேர்த்து பரிமாறிக் கொடுங்கள். அதாவது எவரையும் வெறுக்காதீர்கள். அந்த அன்பு பல்கிப் பரவிப் பிறருக்கும் உதவும். நாட்டிலும் சாந்தத்தை நிரவும். அன்பும் பூக்களின் நறுமணம் போலவே எங்கும் நிரவும், கொடுக்க கொடுக்க குறையாது. வெறுப்பு, பகைமை, விரோதம், கிரோதம், வன்முறை, பயங்கரவாதம், போர் போன்ற தீயவை பெருகி வரும் கலியில் - மாமறை ஓதுதல், பூக்களின் நறுமணம், ஆலய உத்சவங்கள், தினசரி கோயில் தரிசனம், தான தர்மங்கள், வேள்விகள், நித்திய ஆலய பூஜைகள், பெரியோர்களின் தரிசனம், நல்ஒழுக்கம் போன்றவைதாம் அன்பு, சாந்தத்தைப் பூவுலகில் பரிமளிக்கச் செய்து கொண்டிருக்கின்றன.
பூக்கள் செடிகளில் இருப்பதை விட, இறைவனுக்கு பூஜைகளுக்கு, நற்காரியங்களுக்குப் பயன்படுகையில் அவற்றின் தெய்வசக்தி பன்மடங்காகின்றது. இதற்கு மனித குலம் உதவிட வேண்டும். பூக்குலத்திற்கு மனிதச் சமுதாயம் உதவுதல் என்பது பூக்களைப் பறித்து வழிபாடுகளுக்குப் பயன்படுத்துதல் என்பது தானே, இதில் பெரிதும் பயனடைவது மனித குலம் தானே. மனிதர்களுக்கு தானே இதில் அளப்பரிய புண்ணியம் கிட்டுகின்றது.

 

Comments

Popular posts from this blog

ஜோதிட உலகத்தில் இருக்கும் "வக்ர கிரகங்கள்" பற்றிய மிக முக்கியமான தகவல்கள்..?

  தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.. ★"வக்ர கிரகங்கள்" என்பது நமது ஜாதகத்தில் சூரியன் இருக்கும் இடத்திலிருந்து 5,6,7,8 பாவங்களில் "செவ்வாய், சனி, குரு"இந்த கிரகங்கள் இருந்தால் வக்ரமாக கருதப்படுகிறது. ★சூரியனுக்கும் சுக்கிரனுக்கும் இடையில் 40 டிகிரி இடைவெளி இருந்தால் சுக்கிரன் வக்கரமாகவும், ★சூரியனுக்கும் புதனுக்கும் இடையில் 17 டிகிரி இடைவெளி இருந்தால் புதன் வக்கிரமாகவும் கருதப்படுகிறது. ★வக்கிரமான கிரகங்கள் எந்த பாவத்தில் இருக்கிறதோ அந்த பாவம் சார்ந்த விஷயத்தில் நமக்கு விசித்திரமான, வித்தியாசமான, மாற்று சிந்தனை உடைய, நடைமுறைக்கு ஒத்துவராத, வழக்கத்திற்கு மாறான முறையில் நம் மனதில் தோற்றுவிக்கும் மற்றும் நம்மை வழி நடத்தும். ★உதாரணமாக 4ம் பாவத்தில் வக்கிரமான கிரகம் இருந்தால் வீடு வண்டி, வாகனம், சொத்து, property போன்றவற்றில் நம்மை விசித்திரமாக,வித்தியாசமாக, மாற்று சிந்தனை உடையதாக நம்மை வழி நடத்தும். ★10ம் பாவத்தில் வக்கிரமான கிரகம் இருந்தால் விசித்திரமான தொழில் வித்தியாசமான தொழில் மாற்று சிந்தனை உடைய தொழில், எல்லோரும் ஒரு மாதிரி தொழில் செய்தால் இவர் அதற்கு நேர்மாறாக ...

*பத்து பொருத்தங்களும் அதன் பயன்களும்..!!*

  *பத்து பொருத்தங்களும் அதன் பயன்களும்..!!* 1. தினப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் ஆயுள், ஆரோக்கியம் மேம்படும். 2. கணப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் மங்களம் உண்டு. 3. மகேந்திரப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் செல்வம் விருத்தியாகும். 4. ஸ்த்ரீ தீர்க்கம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் செல்வம் சேரும். சொத்துக்கள் வாங்க முடியும். சொத்துக்கள் முதலில் தங்கும். 5. யோனி கூடம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் கணவன், மனைவியின் தாம்பத்தியம் ருசிக்கும். 6. ராசிப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் வம்சம் விருத்தி அடைந்து செழிக்கும். 7. ராசி அதிபதிப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் கரு சீக்கிரத்தில் உண்டாகும். 8. வசியப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் கணவன், மனைவி இருவரும் அன்யோன்யமாக இருப்பார்கள். 9. ரஜ்ஜுப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் கடைசி வரை பெண் சுமங்கலியாக இருப்பாள். 10. வேதை பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் தம்பதிகளுக்கு பெரிய துக்கங்கள் வராமல் காக்கும்.
  *தினமும் வளரும் அதிசய நந்தி கோவில்.* பல சிறப்பம்சங்கள் கொண்ட ஒரு கோவிலாக உள்ளது ஆந்திரா மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ யாகந்தி உமா மகேஸ்வரர் கோவில். இந்திய நாட்டில் லட்சக்கணக்கில் கோவில்கள் உள்ளன. அதில் ஆயிரக்கணக்கான பல கோவில்கள் அதிசயத்தக்க சிறப்பம்சங்களும், வரலாறு பின்னனின் கொண்டதாக இருக்கின்றன. அப்படிப்பட்ட பல சிறப்பம்சங்கள் கொண்ட ஒரு கோவிலாக ஆந்திரா மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ யாகந்தி உமா மகேஸ்வரர் கோவில். இந்த பிரசித்தி பெற்ற சிவன் கோவிலில் இருக்கும் நந்தி சிலையின் அளவு ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. தொல்பொருள் ஆய்வுத் துறையும்கூட இதை உறுதிப்படுத்தியுள்ளது. அதைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம். ​கோவிலின் வரலாறு இந்த கோவில் வைணவ மரபுகளின்படி கட்டப்பட்டுள்ளது. இது 15 ஆம் நூற்றாண்டில் விஜயநகர சாம்ராஜ்யத்தின் சங்க வம்சத்தைச் சேர்ந்த மன்னர் ஹரிஹர் புக்க ராய் என்பவரால் கட்டப்பட்டது. இந்த கோவில் ஐதராபாத்தில் இருந்து 308 கி.மீ தொலைவிலும், விஜயவாடாவிலிருந்து 359 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இது பண்டைய கால பல்லவர்கள், சோழர்...